இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பில் ஆராய்கின்றோம் – நீதி அமைச்சர்

இலங்கையின் இறுதி கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்திடம் சரணடைந்த 12 500 விடுதலைப்புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதனை விட அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் , கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகளை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்…

Read More

பௌத்த மயமாக்கலை கண்டித்து ஒன்றிணையுங்கள்- மாவை அழைப்பு

தமிழர் பிரதேசங்களில்  ஆலயங்கள் அழிக்கப்படுவது மற்றும் பௌத்த மயமாக்குவதை கண்டித்து வியாழக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மதங்கள், கட்சிகள் கடந்து ஒன்றிணையவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளதுடன் வெடுக்கநாறிமலை ஆதிசிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

Read More

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது, வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

Read More

யாழில் 10 படகுகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை ….

Read More