PTA கைதிகள் 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை நாளைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்க படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் படி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்று 11 மணியாவில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சாணக்கியன் அவர்களால் விசேட விதமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை துரித கதியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *