கழுவேத்தி மூர்க்கன்: திரை விமர்சனம்

தெக்குப்பட்டி என்கிற தென் தமிழ்நாட்டுக் கிராமத்தில் வசிக்கும் மூர்க்கசாமியும் (அருள்நிதி), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) உயிர் நண்பர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்து தனது மக்களைச் சுயமரியாதையுடன் வாழ அரசியல்படுத்துகிறார் பூமி. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நண்பனின் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கிறார் மூர்க்கசாமி. இவர்களை ஒழித்தால் அன்றி, தனது சாதி அரசியலை நடத்த முடியாது என்று அதே ஊரைச் சேர்ந்த பிழைப்பு அரசியல்வாதி முனியராஜ் (ராஜசிம்மன்) குமுறுகிறார். அதற்காகத் தனது கட்சி தலைவரை அழைத்து பிரம்மாண்ட…

Read More

கனடாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கும் 700 இந்திய மாணவர்கள்

சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. கனேடிய விசா பெறுவதற்காக, கனேடிய கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட கடிதங்கள் போலியானவை எனத் தெரியவந்தமையே இதற்கான காரணம்.  கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் இம்மாணவர்களுக்கு நாடு கடத்தல்; அறிவித்தலை வழங்கியுள்ளதுதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இம்மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரிலுள்ள முகவர் ஒருவர் ஊடாக 2018, 2019 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்கு சென்றவர்கள். இதற்காக மேற்படி…

Read More

தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்?

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகப்படுத்திய செல்வராகவனை, தனுஷ் இயக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Read More

தீயணைப்பு பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து : இரு விமானிகள் பலி

கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற அந்நாட்டு விமான படையை சேர்ந்த கனடைர் சி.எல்.-215 என்ற நீர் தெளிக்கும் விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதன் போது விபத்துக்கு உள்ளான குறித்த விமானத்திலிருந்த கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

ஆட்சியாளர்கள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் என நம்ப முடியாது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான யானை காகம் மொட்டு ராஜபக்ச அரசாங்கம் தேர்தலை நடத்தாதிருப்பதற்கு பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை வழங்காமல், நீதிபதிகளை விமர்சனம் செய்தும், அவர்களை குறைமதிப்புச் செய்தும் மிரட்ட முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் பட்டினியால் வீதியில் இறங்கும் போது அரச மிருகத்தனத்தையும் பயங்கரவாதத்தையும் பிரயோகிப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், இந்த ஏகாதிபத்தியத்தைப் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்க முடியாது எனவும், எனவே ஐக்கிய…

Read More

உலகின் மிக வேகமான பெண்மணியாக அமெரிக்காவின் Sha’Carri Richardson

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Sha’Carri Richardson, உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார். ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள உலக சாம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். போட்டியை அவர் 10.65 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார். இது மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் இவ்வருடம் வீராங்கனை ஒருவர் வௌிக்காட்டிய அதிகூடிய தேர்ச்சியாகும். கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக…

Read More

ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை வழங்கினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பராமரிக்க முடியாது என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்….

Read More

பனாமாவுக்கு எதிராக அசத்தல் ஆட்டம் – மெஸ்ஸி 800

பனாமா அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 800-வது கோலை அடித்தார். அர்ஜெண்டினா – பனாமா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்ற முதல்…

Read More

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியது

மொராக்கோவில் அட்லஸ் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்-சாபி (Marrakesh-Safi) பிராந்தியத்தில் 6.8 மெக்னிட்யூட் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2800-ஐ கடந்துள்ளது.   2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.  மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.  இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 நாட்களைக் கடந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 

Read More

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் ?- சர்வதேச ஊடகவியலாளரிடம் ரணில் கேள்வி

சனல் 4 ஊடகத்தினை  ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர்…

Read More