67 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

தலைமன்னார் கடற்பரப்பில் 67 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமன்னார், வெலிப்பாறையை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு மிதந்து வந்த ஒரு பையை சோதனையிட்டதில், நான்கு பார்சல்களில் அடைக்கப்பட்ட 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் கடத்தல்காரர்கள் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என…

Read More

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளோம் – சர்வதேச மன்னிப்புச்சபை

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் காணப்படவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளதாக  சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா தலைமையிலான  சர்வதேச மன்னிப்புச்சபையின்  குழுவொன்று மார்ச் மாதம் 27 ம் திகதி முதல் இரண்டாம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட …

Read More

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை அறிவிப்பு

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின்  வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான இறுதி மூலோபாய ஒழுங்கமைப்புத் திட்டத்தை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை…

Read More

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்:ஜனாதிபதி ரணில்

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளது. இதில் பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும். வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வல்லரசுகளுக்கிடையிலான இப்போட்டி நிலைமையானது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க முடியாது என்பதால் , அனைத்திற்கும் தயாராகும் வகையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பலம்மிக்க முப்படையை உருவாக்குவதற்காக ‘பாதுகாப்பு 2030’ செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அநுராதபுரம் விமானப்படை தளத்தில் நேற்று சனிக்கிழமை முப்படையினர் மற்றும்…

Read More

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்த வேண்டும் – ஐ.நா

வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் உள்ளிட்ட 6 சட்ட ஏற்பாடுகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்றுள்ளது. எனினும் யுத்தத்தின் போதான மனிதப்படுகொலைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடந்தகால மனித உரிமை மீறல்கள் அனைத்திற்குமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை…

Read More

அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டன

அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு போதனா வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாக இவற்றை மூட வேண்டியேற்பட்டுள்ளது.   அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை காரணமாக மாதாந்தம் சுமார் 50 வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்காக விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்…

Read More

கொலன்னாவ பகுதியில் பொலிஸார் துப்பாக்கி சூடு

நேற்றிரவு (30) கொலன்னாவ சிங்கபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்க முற்பட்ட குழுவினரை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ சிங்கபுர விளையாட்டரங்கம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போது ஒருவர் கையில் எதையோ எறிவதை கண்டுள்ளனர். சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, ​​உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொலிஸ் ஜீப்பை…

Read More

இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பில் ஆராய்கின்றோம் – நீதி அமைச்சர்

இலங்கையின் இறுதி கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்திடம் சரணடைந்த 12 500 விடுதலைப்புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதனை விட அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் , கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகளை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்…

Read More

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை உடனடியாக அகற்றுங்கள்- தொல்.திருமாவளவன்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில்…

Read More

18 கிலோ போதைப்பொருளுடன் யாழில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோ கிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரும்…

Read More