உள்ளூர்
பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
60,460 சட்டவிரோத போதை மாத்திரைகளை (34 கிலோ) இறக்குமதி செய்த சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பயணப்பொதிகளை பரிசோதித்த போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் மாற்று மருந்தாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக…
சீன கைத்துப்பாக்கியுடன் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் கைது
சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 11 தோட்டாக்களை சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஹல்மரகஹேவா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட்டே கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்திய மலேசிய தம்பதியினர் கைது
மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது. பஹ்னு இன்டநசனல்ஸ் என்ற நிறுவனத்தினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் உள்ள வறிய மலேசிய குடும்பங்களிடமிருந்து அவர்களின் விபரங்களை பெற்று அதனை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன…
இலங்கையிலிருந்து குரங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டமா- மறுக்கின்றது சீன தூதரகம்
சீனாவிற்கு இலங்கையிலிருந்து குரங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனா அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என தெரிவித்துள்ள சீன தூதரகம் 1988 இல் சீனா தனது வனவிலங்கு சட்டத்தினை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது…
அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ். நல்லூரில் ஆரம்பம்
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடைபெறவுள்ள குறித்த யாத்திரை யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம்…
சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கர்தினாலிடம் இல்லை – மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும், பிரதம நீதியரசருக்குமே உண்டு என்றும், கர்தினாலுக்கு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். மேலும் மறுசீரமைப்பு திட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு பணியகத்தை நிறுவவும், குறித்த செயல்முறை மற்றும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் JICA போன்ற அபிவிருத்தி பிரதிநிதி நிறுவனங்களின்…
TID க்கு அழைக்கப்பட்ட முன்னாள் சட்டமா அதிபர்
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளை (19) ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி பேரணியில் கலந்துகொள்ள பேராயர் அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்யாதுபோனால், சுதந்திரமாகவும், அரசியல் பாதுகாப்புடன் பல்வேறு சலுகைகளையும் அனுபவித்து வருபவர்கள் இது போன்ற இன்னும் பல குற்றங்களை செய்வதற்கு தயங்க மாட்டார்கள் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 4 ஆண்டுகளாகிறது. எவ்வளவு…
சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் ‘தோல்வியடைந்த அரசாக’ இலங்கை – சந்திரிக்கா
இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தபோது வரவேற்கத்தக்க பல்வேறு சமூகக்காரணிகள் தென்பட்ட போதிலும், சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் இலங்கை ஓர் ‘தோல்வியடைந்த அரசாக’ மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ‘ஒரு நாடு குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு 75 வருடங்கள் என்பது மிகநீண்டகாலமாகும். அந்தவகையில் காலனித்துவ ஆட்சியாளர்கள் சுமார் 450 வருடங்களாக நாட்டை சீரழித்த பின்னரும்கூட, இலங்கை சுதந்திரமடைந்தபோது பெரிதும் வரவேற்கத்தக்கவாறான பல்வேறு சமூக – பொருளாதாரக்காரணிகள் தென்பட்டன. ஆனால்…

