வெப்பம் உயர்வாகவுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது : 8 மாவட்டங்களில் மாத்திரமே சாதாரண வெப்ப நிலை!

நாட்டில் வெப்பம் உயர்வாகவுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 8 மாவட்டங்களில் மாத்திரமே சாதாரண வெப்ப நிலை காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய மேல், வடமேல், வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் , மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு உயர் வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உயர் வெப்ப…

Read More

அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து உரிமைகளை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரத்தை தலை தூக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து மக்களின் உரிமைகளை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக செயற்படுவதற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் அபாயம் மிக்க சட்ட…

Read More

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் தியாகச் சுடர் அன்னை பூபதியின் 35ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின்  உடையார்கட்டு பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் மேஜர் கதிரவன் அவர்களின் தந்தையார் ஏகாம்பரம் ஜயா ஏற்றினர். ஈகைச்சுடரினை சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. நிகழ்வில்…

Read More

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் இடை நிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார். தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கங்களினால் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது….

Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபை எதிர்த்து  கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபை எதிர்த்து  கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மனித உரிமைகளுக்கு மதிப்ளியுங்கள் ,சிறுபான்மையினரை அடக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்காதே,பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் ,அச்சமின்றி வாழவிடுங்கள்,அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்காதே, மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்காதே, போன்ற முன்று மொழிகளில் பதாதைகளை தாங்கியவாறு  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.தொடர்ந்து கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டு  குறித்த அறிக்கை உரிய திணைக்கழங்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு…

Read More

முட்டைகளுக்கு விலை நிர்ணயம் : அதிவிசேட வரத்தமானி வெளியானது

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை முதல் இப்புதிய விலைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய வெள்ளை நிற முட்டையொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் வெள்ளை முட்டையின் அதிக பட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பழுப்பு நிற முட்டையொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் பழுப்பு…

Read More

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை மறுக்கும் லங்கா ஐ.ஓ.சி.

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதைத் தவிர்க்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.ஓ.சி. அத்தகைய எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும், இது சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் ஒரு போலி செய்தி…

Read More

அடுத்த வாரம் கல்வி அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்படும்-ஜனாதிபதி ரணில்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வாரம் கல்வித்துறையை அவசர நிலைமையின் கீழ் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : பரீட்சை…

Read More

துபாயில் இரு தமிழர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலி

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். துபாயில் அல் ராஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடிக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த…

Read More

வெப்பநிலை அதிகரிப்பு: குழந்தைகள், முதியவர்கள் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அவதானத்திற்குரிய மட்டத்திற்கு உயரக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வெப்பமான காலநிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு கவனமாகப் பின்பற்ற வேண்டிய…

Read More