உள்ளூர்
13 ஆவது திருத்தத்தை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்: கோபால் பாக்லே உறுதி
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை (28) காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக…
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்உடைக்கப்பட்டவை உட்பட 5 சிலைகள் பிரதிஷ்டை
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 5 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 5 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று(27) வவுனியா நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, இன்று(28) சிலைகள் வைக்கப்பட்டன. சிவலிங்கம் , முருகன், பிள்ளையார், அம்மன், வைரவர் சிலைகள் இன்று பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகள் வைக்க ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, நெடுங்கேணி பொலிசார் தடை செய்ய முற்பட்டனர். ஏற்கனவே உடைக்கப்பட்ட சிலைகளையே…
உணவு ஒவ்வாமையால் 26 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலை மாணவர்கள் 26 பேர் உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவினை உட்கொண்ட மாணவர்கள் 26 பேருக்கு இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில், அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் சுமார் 150 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுகாதார பரிசோதகர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு பாரிய பாதிப்புகள் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
40 இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை
சூடானில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மேலும் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அங்கிருப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது. நிர்க்கத்தியாகியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி எம் ஹம்சா குறிப்பிட்டுள்ளார். சூடானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 13 இலங்கையர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்…
நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது
முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. சந்தேகநபர்களிடமிருந்து 8 டிங்கி படகுகளும் சுழியோடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நீர்கொழும்பு, முல்லைத்தீவு, கிண்ணியா, சீன துறைமுகத்தை சேர்ந்த 29 தொடக்கம் 56 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள், உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை – ரஸ்யா அதிருப்தி
இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்Levan Dzhagaryan தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுகின்றோம்,அவர்களிற்கு பல பிரச்சினைகள் உள்ளன,அவ்வாறான நிலை காணப்படுகின்ற போதிலும் இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என உங்களிற்கு…
திருடர்களுடன் எந்த வித டீல்களை போட மாட்டோம்- சஜித்
வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினதோஅல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியினைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் கைகோர்க்க மாட்டார்கள் எனவும், இந்நாட்டை கொள்ளையடித்து, ஏமாற்றி, ஏலம் விட்டு, குடும்ப ஆட்சி நடத்தும் நபர்களுடன் எந்நிலையிலும் ஒன்றிணைந்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டொலர் திருட்டில் ஈடுபட்டவர்கள், இந்த நாட்டிலிருந்து அரச வளங்களையும், டொலர்களையும் திருடி அழித்தவர்கள், பண்டோரா பத்திரங்கள் மூலம் வெளிப்பட்ட மோசடிக்காரர்கள்…
நெடுந்தீவு ஐவர் படுகொலை – ஆறாவது நபரும் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27) வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…
பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு
நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தார். 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதே அக்குழுவின் தலைவர்…
அமெரிக்கா எதிர்காலத்தில் இலங்கையின் மேலும் பல அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பாய்வு செய்துவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்கா உலகளாவிய ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது. வசந்தகரணாகொட போன்று எதிர்காலத்தில் இலங்கையின் வேறு அதிகாரிகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்படுவார்களா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமெரிக்கதூதரக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்க அதிகாரி மிகமோசமான ஊழல் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்…

