கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு  ஒரு சட்டம்  அலி சப்ரி ரஹீமுக்கும்  மற்றொரு சட்டமா? – எதிர்க்கட்சி கேள்வி

தவறிழைப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கெதிராக பக்கசார்பின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஆளுந்தரப்பு எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கும் ஒருதலை பட்சமாகவும் , கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பாதகமாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வார்த்தைப் பிரயோகம்…

Read More

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி  முதல் சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயல்முறையானது கடவுசீட்டு விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும், 3 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் குடியிருப்புகளுக்கு அவற்றை விநியோகிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடவுச்சீட்டுகளை வினைத்திறனாக வழங்குவதற்கு…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே மீண்டும் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று(08) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Read More

யாழ். சென்னை விமான சேவை இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் – துணை தூதர் தெரிவிப்பு

யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில்  இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்  என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம்…

Read More

பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

Read More

இலங்கையை வந்தடைந்த இருவருக்கு monkeypox

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு monkeypox பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாய் மற்றும் மகளுக்கும் இவ்வாறு monkeypox தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவா்கள் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவா்தன தொிவித்துள்ளாா். தந்தைக்கு வௌிநாட்டில் monkeypox தொற்று உறுதியாகி குணமடைந்த பின்னா் நாட்டுக்கு வந்துள்ளமை தொியவந்துள்ளது. இந்நிலையில் தாய் மற்றும் மகளும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த…

Read More

வங்கிக்குள் புகுந்த நாகம் – 5 மணி நேர போராட்டம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் வங்கி பூட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது. இதை அடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினார். பின்பு வங்கி முகாமையாளர் வங்கியை…

Read More

நடாஷா, புருனோ மீளவும் விளக்கமறியலில்

நடாஷா எதிாிசூரியா மற்றும் புருனோ திவாகர ஆகியோரை எதிா்வரும் 21ம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவால் இன்று(07) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆா்ப்பாட்டகாரா்களுக்கு நீதிமன்றால் தடை உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் கொழும்பில் இன்று(07) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்டம் தொடா்பில் சில முக்கிய இடங்கள் மற்றும் வீதிகளுக்குள் நுழைய நீதிமன்றால் தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆா்ப்பாட்டம் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என கோட்டை, கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனி வீதி ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்வைக்கப்பட்ட சமா்ப்பணங்களை கருத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அலாி மாளிகை, பிரதமா் காாியாலயம், ஜனாதிபதியின்…

Read More

கஜேந்திரக்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கிய சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமாரின் கைதினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய செயல்பாடாகும். ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள். கொள்கைகள் வேறு பட்டாலும் என்றும் அநீதிக்காக எம் குரல்…

Read More