உள்ளூர்
உயர்தர செயன்முறை பரீட்சைகள் இன்று(20) ஆரம்பம்
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டியம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இவ்வாறு ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த பாடங்களுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்கள், விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தவிர பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன்…
பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டால் 35 000 பேருக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர்
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் மற்றும் ஓய்வு பெற்ற, சேவையிலிருந்து விலகிய ஆசிரியர்களுக்கான இடைவெளியை நிரப்புதல் என்பவற்றுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் 35 000க்கும் மேற்பட்டோருக்கு நியமனத்தை வழங்கி ஆசிரியர் சேவையிலுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலவச…
உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த
உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ளவர்கள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடளாவிய ரீதியிலுள்ள சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் பின்னர் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும். உதவி ஆசிரியர் நியமனங்களை…
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை
ஈரான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian)உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர்…
சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு – மோதரையில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் காயம்
கொழும்பு – மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகம் செவ்வாய்க்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்நாட்டுபொறிமுறைகள் ஊடாக நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி – அலிசப்ரி
உள்நாட்;டு பொறிமுறைகள் ஊடாக இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிற்கான அமைச்சுகள் இடையிலான குழுவின் ஆரம்பஅமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளுடன் ஈடுபாட்டை தொடரும் அதேவேளை உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் குறித்த அமைச்சுகள் மத்தியிலான நிலையில் குழுவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளமை மனித உரிமைகளை உறுதி செய்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்த…
நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் சமந்தாபவர் வேண்டுகோள் !
கருத்துச் சுதந்திரத்தின் மீதான நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை செவ்வாய்க்கிழமை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்திய போதே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சர்வதேச…
இலங்கை மீனவர்களின் துயரம்
இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடிகள் நாட்டு மக்களை பெருமளவில் பாதித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் நீர்கொழும்பில் உள்ள மீனவர்களை சந்தித்து அண்மையில் உரையாடிய போது அவர்கள் தெரிவித்த விடயங்கள்.

