மோதலுக்கு தயாராகும் அசர்பைஜான்-ஆர்மீனியா : ஐ.நா அவசரக் கூட்டம்

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் (Nagorno-Karabakh) பிராந்தியத்துடன் வீதிப் போக்குவரத்தை அசர்பைஜான் படையினா் முடக்கியுள்ளதால், அந்த நாட்டிற்கும் அண்டை நாடான ஆா்மீனியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அசபைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம்…

Read More

மேற்கு ஆபிரிக்க கடலில் நிர்க்கதியான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று மேற்கு ஆபிரிக்காவின் Cape Verde கடலில் நிர்க்கதிக்குள்ளானதில் 60-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது. சிறுவர்கள் உட்பட 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதமாக கடலில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த குறித்த  படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் செனகல் நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. இந்த படகு கடந்த திங்கட்கிழமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படகு மூழ்கியதாக ஆரம்பத்தில் தகவல்கள் வௌியாகியிருந்தாலும், பின்னர் அது கடலில் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டமை…

Read More

உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இதனை கூறினார்.   அவர் தனது உரையில் கூறியதாவது:  உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது. எனது குடும்பத்தில்…

Read More

ஹவாய் காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஹவாயில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்காக மேலதிக நிபுணர்கள் ஹவாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களுக்கான மருத்துவப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அஞ்சப்படும் நிலையில், எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1,000 பேர் இதுவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்…

Read More

பாக்கிஸ்தானின் இடைக்கால பிரதமர் யார்?

பாக்கிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று இறுதி செய்யப்படும் என தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இறுதி தீர்மான்த்தை எடுப்பதற்கு முன்னர் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் கோரிக்கைக்கு அமைய பாக்கிஸ்தான் ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். அதனையடுத்து தற்காலிக பிரதமர் பதவிக்காக 6 பேரின் பெயர்கள் தற்போது தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாக்கிஸ்தான் அரசியலமைப்பிற்கு அமைய இடைக்கால பிரதமரை தெரிவு செய்வதற்காக அந்த நாட்டு பிரதமருக்கும்…

Read More

39 இலங்கையர்கள் பயணித்த பஸ் விபத்து

துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. பணி நேரத்தை முடித்துக் கொண்ட இலங்கையர் குழு, பேருந்து ஒன்றில் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​யூப்சுல்தான் பகுதியில் பேருந்து கவிழ்ந்துள்ளது. சுரங்கப்பாதையில் பயணித்த பேருந்து…

Read More

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

தனக்கெதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ‘‘கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி மீட்க வேண்டும்’’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்தியாவை உடைப்பதே…

Read More

பதவிக்காலம் நிறைவடைய முன்னரே கலைக்கப்பட்டது பாகிஸ்தான் பாராளுமன்றம்

கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது.  இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானில் கடந்த 2018-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.  இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான்…

Read More

பெய்ஜிங்கில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி, 18 பேரை காணவில்லை

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணாமல் போயுள்ளனர்.  பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்ததால், நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழையால் 59,000 வீடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட 1,50,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  100-க்கும் மேற்பட்ட பாலங்களும்…

Read More

அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுக்கு விஜயம்

ஜி-20 அமைப்பின் 2023-ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கின்ற நிலையில் , வரும் செப்டம்பர் 9, 10 ஆம் திகதிளில் புதுடில்லியில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதற்கமைய ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 8ஆம் திகதி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வொஷிங்டனில் இருந்து செப்டம்பர் 7ஆம் விமானத்தில் புறப்பட்டு 8 ஆம் திகதி டில்லியில் தரையிறங்குவார் என…

Read More