பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போபண்ணா ஜோடி சாம்பியன்

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹண் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-மேட் எப்டன்ஜோடியும், நெதர்லாந்தின் வெஸ்லிகூல்ஹாஃப்-பிரிட்டனின் நீல் ஸ்பக்ஸ்கி ஜோடியும் மோதின.

இதில் போபண்ணா-எப்டன் ஜோடி 6-3, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வெஸ்லி-நீல் ஸ்பக்ஸ்கி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் ஏடிபிமாஸ்டர்ஸ் 1000 ரக போட்டிகளில் மிக அதிக வயதில் (43 வயது)பட்டம் வென்றவர் என்ற பெருமையை ரோஹன் போபண்ணா பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *