கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (10) மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8.00 வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.

