உக்ரைனின் மரியுபோலில்  ரஷ்ய அதிபர் புதின்

மரியுபோல்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக, மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு புதின் திடீரென பயணம் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. சனிக்கிழமை இரவு மரியுபோல் பகுதிக்கு காரில் சென்ற புதின், அங்கிருந்த மக்களுடன் உரையாடியதாக ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மரியுபோல் நகரத்தை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைபற்றிய பிறகு புதின் மேற்கொண்ட முதல் பயணமாக இது கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *