ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – மாலைதீவின் புதியஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் இலங்கை – மாலைத்தீவு ஜனாதிபதிகள் சந்தித்ததுடன் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *