நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பங்களிப்புடன் இன்று புதன்கிழமை (11) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர்  சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாதமை குறித்து தாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *