காலி – கொக்கலையில் ரயில் கடவையில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தோட்டை புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் கார் மோதியுள்ளது.
காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய அவருடைய பாட்டியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அஹங்கம பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

