கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது உள்ளூர் வாக்கு வங்கி தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டது. மேலும் இது பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்ததாக இல்லை.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பாரம்பரியத்தை கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடா மற்றும் அதன் தலைவர்களை இலங்கை கேட்டுக்கொள்கிறது.

