இலங்கை விமானிகளின்றி பறக்கவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது. அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால், அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் அந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியேறினால், வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு, விமான சேவை தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *