ஆற்றில் கவிழ்ந்த பஸ்: 10 பேர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று மனம்பிட்டிய கொடலீய பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *