கஜேந்திரக்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கிய சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமாரின் கைதினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய செயல்பாடாகும்.

ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள்.

கொள்கைகள் வேறு பட்டாலும் என்றும் அநீதிக்காக எம் குரல் ஒலிக்கும். இவ் அநீதி சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய மற்றைய உறுப்பினர்களின் மவுனம் சொல்வது என்ன. என்று சாணக்கியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *