அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்திலுள்ளள பாடசாலையொன்றின் பட்டமளிப்பு விழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியானதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
ரிச்மன்ட் நகரில் செவ்வாய்க்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பட்டமளிப்பு விழா முடிவடைந்தவுடன் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 வயதான சந்தேக நபர், தப்பியோட முயன்றபோதிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

