மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து

திக்வெல்ல கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார்.

இந்த விபத்து நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படகு கவிழ்ந்த போது அவருடன் இருந்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரட்டுவ – பதீகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *