மன்னார் கிராம சேவகர் உட்பட 11 பேர் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா நாட்டுக்குச்  செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் சி.ஐ.டி.யின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை (17)  கைது செய்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் 36 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவராவார்.

ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *