சிறுபோக உர கொள்வனவிற்காக கூப்பன் வழங்க தீர்மானம் – விவசாய அமைச்சு

சிறுபோகத்திற்கு தேவையான உர கொள்வனவிற்காக கூப்பன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஒரு ஹெக்டெயருக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க கூறியுள்ளார். 

இந்த தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் காணப்பட்ட சிக்கல்கள் காரணமாக கூப்பன்களை வழங்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார். 

அதற்கமைய அச்சிடுவதற்காக கூப்பன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். 

அச்சு நடவடிக்கைகளுக்கு ஒரு வாரம் தேவை எனவும் அதன் பின்னர் கூப்பன்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் குணதாச சமரசிங்க குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *