மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது. 

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தனிநபர் சட்டமூலமாக அண்மையில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *