உணவு ஒவ்வாமையால் 26 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலை மாணவர்கள் 26 பேர் உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவினை உட்கொண்ட மாணவர்கள் 26 பேருக்கு இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில், அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் சுமார் 150 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார பரிசோதகர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு பாரிய பாதிப்புகள் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *