800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயந்திக்கா அபேரத்ன முதலிடம்

இலங்கையின் கயந்திக்கா அபேரத்ன, மிச்சிதாக்கா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுனர் விழாவில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

பத்தாவது மிச்சிதாக்கா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகள் ஜப்பானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நிறைவு பெற்றன.

மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியை 2 நிமிடங்கள் 4.26 செக்கென்களில் நிறைவு செய்த இலங்கையின் கயந்திக்கா அபேரத்ன முதலிடம் பெற்றார்.

கயந்திக்கா அபேரத்ன இந்தப் போட்டி பிரிவில் இலங்கை சாதனைக்கும் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *