திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீள நடத்த வேண்டுமென சம்பந்தன் கிடுக்குப்பிடி : கிழக்கில் பிரசாரத்தினை ஆரம்பித்தார் சிறீதரன்

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவினையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைமை வேட்பாளர்களின் ஒருவரான சிவஞானம் சிறீதரன் நேற்று முதல் மட்டக்களப்பில் பிரசார நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,  இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதோடு, வருடாந்த மாநாடு…

Read More

முறைகேடான பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பவேண்டும் – சாலிய பீரிஸ்

சில பொலிஸ் அதிகாரிகளால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அவமானங்கள் குறித்து வெளிப்படுத்துவதற்கான தைரியம் பாதிக்கப்பட்ட பலருக்கு இருப்பதில்லை. ஆனால் பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நாம் குரலெழுப்பாவிடின், முறைகேடான சில பொலிஸ் அதிகாரிகளின் மோசமான நடத்தையினால் வெகுவிரைவில் நாட்டுமக்கள் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக உணருவார்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார். பொலிஸாரின் அண்மையகால நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அவர், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: அண்மையில் கொழும்பு…

Read More

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதம் வரை அதிகரிப்பு – விபரம் இதோ !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார். இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த  நோய்களுக்கான…

Read More

இலங்கை வந்த  சிம்பாப்வே கிரிக்கெட் அணி

இலங்கை அணியுடனான போட்டி தொடரில் பங்கேற்கவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் சிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 6 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.

Read More

தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் விசேட அறிவித்தல்

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, “கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, காலி, கல்முனை ஆகிய 09 பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு…

Read More

ஜனாதிபதி  இன்று வடக்கு விஜயம்

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.  பின்னர் மாலை 7.00 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றார். 5ஆம் திகதி காலையில் வவுனியா…

Read More

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் அலெக்ஸ் மரணம் – நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது….

Read More

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸாரின் செயற்பாடு திருப்தி இல்லை – அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. சூம் காணொளி ஊடாக புதன்கிழமை (03) நடைபெற்ற…

Read More

திருமலை 5 மாணவர் படுகொலை விவகாரம் : 18 வருடங்கள் கடந்தும் நீதி நிலைநாட்டப்படவில்லை : சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை…

Read More

வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது : திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள்

இவ்வாண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. சில வர்த்தகர்கள் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாத பொருட்களின் விலைகளையும் அதிகரித்து இச்சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு செயற்படவேண்டாம் என்று வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.   இவ்வாண்டு முதல் அமுலுக்குவரும் பெறுமதிசேர் வரி…

Read More