வெடுக்குநாறி தாக்குதல் சம்பவம் : தமிழர்கள் மீதான அப்பட்டமான திட்டமிடப்பட்ட கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பு – மணிவண்ணன் கண்டனம்

சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தவர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள். அந் நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றியதோடு…

Read More

இலங்கை குற்றவாளிகள் துபாயிலிருந்து வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்!

துபாய்க்கு தப்பிச் சென்ற இலங்கையின் திட்டமிட்ட குற்றவாளிகள் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துபாய்  நாட்டிலுள்ள  உள்ள குற்றவாளிகளை சர்வதேச அளவில் கைது செய்வதற்கான சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்டின் மிகக் கடுமையான குற்றவாளிகள் வேறு பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்து  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நிஹால்  தல்துவ தெரிவித்துள்ளார்.

Read More

சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி!

சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நேற்று (05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், மத்திய வங்கியின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான்…

Read More

நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரை !

வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது என்றும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, புத்தகம், மருந்து…

Read More