2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் முறையாக நடைபெறும்!

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்..  பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வருடம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை…

Read More

சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் இளம் நாயகன்!

2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன். குறிப்பாக இவ்வருடத்தில் நடக்கவுள்ள மலேசியாவில் நடைபெறவுள்ள  Commonwealth Chess Championship, ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள  World Cadet Championship, தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள  World Youth Chess Championships, கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள Asian Youth Chess Championship, மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள  Western…

Read More

4100 போதை மாத்திரைகளுடன் ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது

போதை மாத்திரைகளை தன்னகத்தே வைத்திருந்த பாடசாலை ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.  22 வயதுடைய குறித்த இளைஞன், கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

TIN இலக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் பொதுவான முறை வழமைப்போன்று இடம்பெறும் நிலையில்,    பொது மக்களுக்கு மிக எளிதாக இதனை வழங்குவது தொடர்பில் நேற்று (23)  இடம்பெற்ற ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன்…

Read More

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை!

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ்

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு…

Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (23) 7 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்தனர். இந்நிலையில் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோதே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மற்றும் சங்க தலைவி கா.ஜெயவனிதா ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல்…

Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு அழைப்பு விடுக்கக்கோரி தமிழகத்திலிருந்து அமைச்சருக்கு கடிதம்

இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயண குழுவுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, தமிழ்நாடு – இராமநாதபுரம் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயண குழுவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :…

Read More

ஓரிரு மாதங்களுக்குள் வடக்கு, கிழக்கில் பாரியளவில் காணிகள் விடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 20 000 ஹெக்டயர்களுக்கும் மேற்பட்ட காணிகள் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (23)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விற்பனையின் போது 60 வீத இலாபம் கிடைக்கப்பெறுகிறது. ஆனாலும் சில இடைத்தரகர்களால்…

Read More

கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து ; ஒருவர் பலி ; 9 பேர் காயம்

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று  வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ…

Read More