இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று (30) முதல்  கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், சுதந்திர தின கொண்டாத்திற்காக  3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி சுதந்திர தின விழா நிறைவடையும் வரையிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும்…

Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

கொழும்பில் இன்று (30) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு  நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம்…

Read More

சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரசூட்  ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பாரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மீன்பிடி கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்படி, குறித்த மீன்பிடி படகு சீஷெல்சின் விக்டோரியா  தலைநகருக்கு  கொண்டு செல்லப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட…

Read More

இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் வீழ்ச்சி!

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதில், வரத்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதிகள் 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது இது 0.39% சரிவாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

Read More

லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

அரச நிர்வாக சேவை அதிகாரிகள் சுகவீன விடுமுறை போராட்டம்

அனைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகளும் இன்று திங்கட்கிழமை (29) முதல்  சுகவீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகளின்  பங்குபற்றுதலுடன் இன்று  பேச்சுவார்த்தை  ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி, “இன்று, கூட்டுக்…

Read More

யாழ். மயிலிட்டி கடலில் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீட்பு

யாழ்ப்பாண கடற்பகுதியில் ஆபத்தான படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.  மயிலிட்டி கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை (27) குடும்பஸ்தர் ஒருவர் தனது 2 வயது பிள்‍ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.  அவ்வேளை, படகினுள் கடல் நீர் புகுந்ததுடன், படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர்.  அவர்களது சத்தம் கேட்டு, கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

Read More

யாழில் இளைஞரைக் காணவில்லை!

யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த 29 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை  அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும்…

Read More

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என தாம் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More