மியன்மாரில் இருந்து தப்பிய மூவர் சி.ஐ.டியில் வாக்குமூலம்

மியன்மாரில் உள்ள முகாம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பினால் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், முகாமில் இருந்து தப்பி நேற்று (24) இலங்கை திரும்பிய ஐவரில் மூவர் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க வந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மியன்மாருக்கு தரவு செயற்பாட்டாளர்களாக சென்ற நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் அடங்கிய குழு, பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி…

Read More

JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன?

2020 ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை…

Read More

யாழில் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது.   அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர். கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். “தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை…

Read More

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1004 கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழேயே 989 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார். இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Read More

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார் – மைத்திரிபால

கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்தடைந்தமைக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவான பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவ்வாறிருகையில் அவர்களின் பின்னால் செல்வதா அல்லது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொறுத்தமான வேட்பாளரை சுதந்திர கட்சி…

Read More

யாழில் 20 இளைஞர்கள் புனர்வாழ்வுக்கு

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் கைதான 20 இளைஞர்களை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது , போதைப்பொருளை கடத்தியமை,  உடமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 100கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும்…

Read More

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.  தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.  அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.  குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’,…

Read More

சிறையிலுள்ள தமி்ழ் அரசியல் கைதிகளின் விடுதலை : ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க நடவடிக்கை !

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒழுங்குபடுத்தியது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல்…

Read More

மியன்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்க கூட்டிணைந்த முயற்சி : 56 இலங்கையர்கள் தடுத்துவைப்பு

அண்மையில் மியான்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மியான்மார் அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் இலங்கையர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பதிவாகிவருவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை முன்னதாக மியன்மார் அரச அதிகாரிகளுடன் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகளை அடுத்து, 2022 – 2023 க்கு இடைப்பட்ட காலத்தில்…

Read More