அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்க கோரி ராஜீவ் கொலையில் விடுதலையானோர் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் 11.11.2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளில்இருந்து கொட்டப்பட்டு இலங்கைஅகதிகள் முகாமில் தங்கியுள்ளேன். இந்த முகாம் சிறையைவிட மோசமானது. அறையை விட்டு…

Read More

ஐ சி சி தடையை நீக்குதல் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை இழத்தல் குறித்து கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர்கள் உப குழுவுக்கு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போது விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும் , கிரிக்கெட் தொடர்பில் நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு அதிகாரம்வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்களன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்தார். மேலும், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிப்பதாயின், அதற்கு அமைச்சரவையின் அனுமதி…

Read More

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமானால், கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்

இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர  விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக்…

Read More

2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற…

Read More

வரவு செலவு திட்டம் 2024 – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (14) முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல்…

Read More

ஒக்டோபரில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மூலம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இவ்வாண்டு ஒக்டோபர் வரையான…

Read More

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்த மஹிந்த

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில்  மஹிந்த ராஜபக்சவிடம்  ஊடகவியலார்கள் கருத்துக் கேட்டபோதே  உடனடியாக எப்படிக்  கருத்துக்கூறுவது எனக்கூறி மறுத்து விட்டார். இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, ” நான் வரவு – செலவுத்திட்ட…

Read More

காணி உரிமை கோரும் மயிலத்தமடு பாற்பண்ணையாளர்களுக்கு சிறு வெற்றி

கிழக்கு மாகாணத்தில் கறவை மாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடும் 13 சிங்கள மக்களை காணியை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியாட்கள் சிலர் தாற்காலிக வீடுகளை அமைத்து விவசாயம் செய்து வருவதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வருடம் செப்டெம்பர் 22ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13ஆம் திகதி அறிவித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவணை ஆகிய பிரதேசங்களில் புல்வெளிகளை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள…

Read More

சீனாவிடமிருந்து பொலிஸ் திணைக்களத்துக்குமோட்டார் சைக்கிள்கள், கணனிகள் நன்கொடை

சீனாவினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க…

Read More

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகள் : நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர் என்கிறார் சஜித்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More