6 வாரங்களுக்கு களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்திற்கு பூட்டு

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் எரிவாயு மற்றும் நீராவி விசையாழி நேற்று (17) முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 6 வார பராமரிப்புக்காக ஆலை மூடப்படும். களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 165 மெகாவாட் திறன் கொண்டது மற்றும் நப்தா எரிபொருளில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய சுகாதார செயலாளராக பாலித மஹிபால நியமனம் ?

புதிய சுகாதார செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) வைத்தியர் பாலித மஹிபால நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ நிபுணரான வைத்தியர் மஹிபால 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாக நியமனம் பெறுவதற்கு முன்பு சுகாதார செயலாளராகவும் பிரதி பொது சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். இவர்  பொது சுகாதாரம், சுகாதார துறை முகாமைத்துவம், வணிக நிர்வாகம் மற்றும் பொருளாதார…

Read More

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிமன்று மறுப்பு

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.  யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.  குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது.

Read More

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவை 4 ஆவது தடவையாக நீடிப்பு : அரசியலமைப்பு பேரவை நிராகரிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு  ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நான்காவது சேவை காலநீடிப்பை அரசியலமைப்பு பேரவை  நிராகரித்துள்ளது. இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன 2020ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பு பேரவை ஊடாக தீர்மானம் எடுப்பது இழுபறி நிலை காணப்பட்டபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரின்…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 32.5 மில்லியன் டொலர் நிதியுதவியளிக்கும் அமெரிக்கா

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்காக 32.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பசியைக் குறைத்து கல்வியறிவு மற்றும் ஆரம்பக்கல்வியை மேம்படுத்தும் ஒரு உணவு உதவி முன்முயற்சியான கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கிற்கான சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்க விவசாயத்திணைக்களம் புதிததாக ஒரு 32.5 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதை அறிவிப்பத்தில் மகிழ்ச்சியடைவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. பாடசாலை உணவுகள், ஆசிரியர்களுக்கான…

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – மாலைதீவின் புதியஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் இலங்கை – மாலைத்தீவு ஜனாதிபதிகள் சந்தித்ததுடன் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்…

Read More

வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில்நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார். வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய…

Read More

இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறு வௌியீட்டில் மாற்றம்

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடர்பிலான சிங்கள, தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் கூறுகிறது. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை,…

Read More

சர்வதேச விசாரணையே தேவை – நிதி தேவையில்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு…

Read More

அஸ்வெசும நன்மை  மும்மடங்காக அதிகரிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More