கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச் சூத்திரம் அவசியம் – அரசாங்க நிதி பற்றிய குழு

இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ. த சில்வா கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார். கோதுமை மாவுக்கு விலைச்சூத்திரமொன்றைப் பேணிவந்தால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய…

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இன்று திருத்தம் !

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை (4) மீண்டும் திருத்தப்படவுள்ளது. கடந்த தடவை, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3,127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, தற்போது 1,256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.  2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 587 ரூபாவாகவிற்கு விற்கப்படுகின்றது. இந்தநிலையில் லிட்ரோ…

Read More

சீனாவை போன்று சமூக வலைத்தள பாவனையை தடைசெய்ய மாட்டோம் – அரசாங்கம் தெரிவிப்பு

சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக இன, மத மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக சமூக வலைத்தள ஊடகங்களை முடக்க எதிர்பார்க்கவில்லை….

Read More

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை முன்வைத்துள்ள மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் வாஷிங்டனிலுள்ள தலைமை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கடன் தொகை தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , மரணத்தின் விளிம்பில் இருந்த பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின்…

Read More

நஷ்டத்தை ஈடு செய்யும் வரை சிரமங்களுக்கு மத்தியிலும் சுமையை ஏற்க வேண்டும் – அரசாங்கம்

இலங்கை மின்சாரசபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வரை, குறுகிய காலத்துக்கு தற்காலிகமாக மின் கட்டண சுமையை சுமக்க நேரிடும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவையில் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய இடைவெளியை நிரப்பும் வகையில் விலை சூத்திரத்தை தயாரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனவே சிரமத்துக்கு மத்தியிலேனும் இவற்றை…

Read More

ரயிலுக்காக காத்திருந்தவர் திடீர் மரணம்

ரயிலில் பயணிப்பதற்காக ஹட்டன் புகையிரத நிலையத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மஸ்கெலியா, நல்லதண்ணி  பகுதியைச்  சேர்ந்த சுமார் 70 வயதுடைய பி.எஸ். ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரயில் வரும் வரை பயணிகள்  அமர்வதற்காக  ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உயிரிழந்த நிலையிலேயே  அவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read More

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார். தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் அவுஸ்திரேலியானவின் டே ஸ்ட்ரீட் பொலிஸ்…

Read More

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானித்து வருகின்றோம் ; ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பில் Google, Meta (Facebook, Instagram, WhatsApp, Threads), Amazon, Apple, Booking.com, Expedia Group, Goto, Grab, Line, LinkedIn, Rakuten, Spotify, Snap, Shopify, X (Twitter) மற்றும் Yahoo…

Read More

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்த பின்புலத்தில்தான் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தவறு

– அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவதனாம் செலுத்தி இரு தரப்பினரும்…

Read More