விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக திருமலையில் போராட்டம் 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.  இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.  இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே”…

Read More

மத ரீதியில் இனப்பிரச்சினையை தீவிரப்படுத்த முயற்சி : அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தல்

தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம்…

Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எனவே செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது…

Read More

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் பலி!

நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. குறித்த மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி, வெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

Read More

13ஆவது திருத்தம், அதிகாரப்பகிர்வு விடயங்கள் காலதாமதமாகுமாம்

13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தல், மற்றும் அதிகாரப்பகிர்வு விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் காலதமாதமாகும் என்று அரச உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, செப்டெம்பர் மாத ஐ.நா.கூட்டத்தொடர் மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவுக்கான மீளாய்வு உள்ளிட்ட விடயங்கள் நிறைவுற்றதன் பின்னரேயே இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினர்…

Read More

வடக்கில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் 

இலங்கையின் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம், வட மாகாணத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது. சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில்  தெங்கு முக்கோண வலயம் அறிமுகம் செய்யப்பட்டது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை ஆகிய மாவட்டங்களை இணைத்து இந்த புதிய தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்போது தென்னை வளர்ப்பாளர்கள் கௌரவிப்பு  நிகழ்வில் அமைச்சர்  ராமேஸ் பத்திரன  தென்னங்கன்றுநாட்டினார். இந்நிகழ்வில் அமைச்சர்  ராமேஸ்…

Read More

ஆதித்யா L-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலமானது ராக்கெட்டிலிருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா L-1 விண்கலம் PSLV C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, சரியாக ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்கு பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து ஆதித்யா விண்கலம் தனது தனித்த பயணத்தைத் தொடங்கியது.  இது குறித்து…

Read More

யாழில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம், பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கம், அனலைத்தீவு கடற்றொழிலாளர் சங்கம், நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கம், இன்பற்றி கடற்றொழிலாளர் சங்கம் நயினா தீவு , பாசையூர் கடற்றொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  இதனையடுத்து, தமது கோரிக்கைகள்…

Read More

கொழும்பு துறைமுகத்தில் இந்திய யுத்த கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.டில்லி என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை கொழும்துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் 163.2 மீற்றர் நீளம் கொண்டதாகும். இக்கப்பலின் கப்டன் அபிஷேக் குமார் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கும் இக்கப்பலை பார்வையிட வாய்ப்பளிக்கப்படவுள்ளது….

Read More

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சீனரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.   இவர்களது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து, நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல்…

Read More