கண்ணிவெடி அகற்றலுக்காக ஜப்பானிடமிருந்து 170 மில்லியன் நிதியுதவி

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம்  170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும்  நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ( MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளார் இந்த வருடத்திற்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ்  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள  காணிகளை சுத்திகரிக்க எதிர்பார்க்கப்படுவதோடு, இடம்பெயர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்ளை மீள குடியமர்த்துவதற்கும்  எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணிவெடியகற்றும்…

Read More

இந்திய வைத்தியர்கள் இலங்கையில் வைத்தியசாலைகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பு

இந்திய வைத்தியர்கள் இலங்கையில் வைத்தியசாலைகளை ஆரம்பிப்பதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள வைத்திய நிறுவனமொன்றின் மருத்துவ திட்டமொன்றை ஆரம்பித்து வைத்ததன் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநிலத்தில் கிடைக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  இதற்காக கொழும்பு தவிர்ந்த ஏனைய நகரங்களிலும்…

Read More

உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இதனை கூறினார்.   அவர் தனது உரையில் கூறியதாவது:  உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது. எனது குடும்பத்தில்…

Read More

அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்து அட்டூழியம்; 6 பேரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய ஆறு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு – பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது  வீட்டின் சொத்துகளுக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்துள்ளனர்.  குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV…

Read More

வௌிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடு

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 03 முறைகள் மூலம் இந்த வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையில், வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  நிலமற்ற பணியாளர்களுக்கு நகர்ப்புறத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுவது இரண்டாவது முறையாகும்….

Read More

லொறி – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவன் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி A9 வீதியின் கைதடி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாட்டு வண்டி சவாரிக்காக கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.  யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதான மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  இதேவேளை, தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியின் டெவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு(12) 10.30…

Read More

பஸ்,லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். எனினும், ஏனைய வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டுகள், சில காலங்களுக்கு தளர்த்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க…

Read More

ஹவாய் காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஹவாயில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்காக மேலதிக நிபுணர்கள் ஹவாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களுக்கான மருத்துவப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அஞ்சப்படும் நிலையில், எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1,000 பேர் இதுவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்…

Read More

சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், 20 மத்திய நிலையங்களில் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது…

Read More

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

நீர்க்கொழும்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்க்கொழும்பு லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More