வியட்நாம் – இலங்கைக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வியட்நாம் நாட்டின் துணை ஜனாதிபதி ட்ரான் லு குவாங்கிற்கும் இடையே நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (16) சீனாவில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது. அரச மற்றும் தனியார் துறைகளில் தற்போதுள்ள கூட்டு முயற்சிகளுக்கு மேலதிகமாக புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளை ஆராயுமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு வியட்நாம் துணை ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். வியட்நாம் நாட்டின் முதலீடுகளின் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை…

Read More

இடமாற்றத்தைப் பொருட்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடை நிறுத்தப்படும் – கல்வி அமைச்சு

இடமாற்றத்துக்கான அறிவித்தல்களை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கமைய பணியாற்றாத் தவறும் ஆசிரியர்களின் சம்பளம் இடை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்டு;ள்ள ஆசிரியர்களுக்கு அதற்கேற்ப பணியாற்றுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , எனினும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் முன்பிருந்த பாடசாலைகளிலே பணியாற்றுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை நிமித்தம் அதிபர்களின் கோரிக்கைக்கு அமைய அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாபவும் ,…

Read More

‘G77 Plus China’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதிக்கு அழைப்பு

கியூபாவில் செப்டெம்பர் மாதம் கியூபாவில் நடைபெறவுள்ள ஜீ 77 சீன உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரெஸ் மார்செலோ கோன்சாலஸினால், கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெலின் அழைப்புக் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கியூபாவின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘அபிவிருத்தியின் தற்போதைய சவால்கள்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு’ என்ற தொனிப்பொருளில் செப்டெம்பர் 15 மற்றும்…

Read More

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இணையவெளி மற்றும் இணைய கொள்கைகளுக்கான தூதுவர் நதானியேல் சி.ஃபிக் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவர் கொழும்பில் இணைய பாதுகாப்பு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சுதந்திரம் தொடர்பான அரச மற்றும் தனியார் துறையினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். அவர் தனது இலங்கை பயணத்திற்கு முன்னதாக, இன்று வியாழக்கிழமை இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். பெங்களூருவில் நடைபெறும் ஜீ20 டிஜிட்டல் பொருளாதார…

Read More

பிரபாகரனின் மனைவி , மகள் உயிருடன் இருக்கின்றனரா?

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அன்டனி ஆகியோரது சடலங்கள் மாத்திரமே இறுதி யுத்தத்தின் போது கண்டு பிடிக்கப்பட்டன. பிரபாகரனின் குடும்பத்தார் தொடர்பான தகவல்கள் எமக்கும் தெரியாது என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. பிரபாகரனின் மனைவியின் சகோதரி எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மற்றும் சார்ள் அன்டனி ஆகியோரின் சடலங்கள்…

Read More

உலக சாதனை படைத்த இலங்கை மாணவி

மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி சோழன் உலக சாதனை படைத்த உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட என்ற சாதனையை பொகவந்தலாவையைச் சேர்ந்த பாடசாலை மாணவி 8 வயது கனிஷிகா பெற்றுள்ளார். பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகள் கனிஷிகா பொகவந்தலாவை ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி…

Read More

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 54 வீட்டுப் பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று (16) காலை நாட்டை வந்தடைந்தனர்.  இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் குறித்த வீட்டுப் பணிப்பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனையோர் பொலன்னறுவை, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

Read More

தனது பங்கை இலங்கை புதுப்பித்துள்ளது: அமெரிக்க தூதுவர்

இலங்கை மீட்சிக்கான பாதையில் பயணிக்கும் நிலையில், சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கேந்திர நிலையமாக தனது பங்கை புதுப்பித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற இந்தோ-பசுபிக் சுற்றாடல் பாதுகாப்பு மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி, வன பாதுகாப்பு தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரப்பணிப்புடன் செயற்படுவதாக ஜூலி சங் தெரிவித்தார். உலகின் அனைத்து நாடுகளும் வெற்றியையும்  ஸ்திரத்தன்மையையும் அடைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என…

Read More

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடல் கண்காணிப்பு விமானம்

இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்றை பதிலீடாக கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கக்தினால் ஓராண்டுக்கு முன் நாட்டிற்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல் கண்காணிப்பு விமானம், வருடாந்த கட்டாய பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி…

Read More

Shi Yan 6 சீன ஆய்வுக் கப்பல் இலங்கை வருவது உறுதி?

ருஹூணு பல்கலைக்கழகம் மற்றும் நாரா நிறுவனத்தின் அழைப்பிற்கமையவே சீனாவின் யுத்தக் கப்பலொன்று ஒக்டோபரில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன கப்பலின் வருகையால் மீண்டும் பிராந்தியத்துக்குள் சர்ச்சை ஏற்பட இடமளிக்காமல் , அரசாங்கம் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , சீன ஆராய்ச்சி கப்பலொன்று…

Read More