தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தெஹிவளை Oban ஒழுங்கையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்றிரவு(19) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read More

நாளை சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் (Ng Eng Hen), நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் (Grace FU Hai yien) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். பெரிஸ் உடன்படிக்கையின் 6ஆவது உறுப்புரை, சர்வதேச கார்பன் வர்த்தகத்தின்…

Read More

கனடா காட்டு தீ:கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம் -15000 குடும்பங்களை வெளியேற உத்தரவு

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் பல வீடுகளை காட்டுதீ விழுங்கியுள்ள நிலையில் சுமார் 15000 குடும்பங்களை அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 36000 பேர் கொண்டமேற்குகெலோவ்னா நகரில்  பல கட்டிடங்கள் தீப்பிடித்துள்ளன 2400 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முழுமாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது-மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்;ட காட்டுதீக்கள் காணப்படுகின்றன. இதேவேளையெலோநைவ்லிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட காலஎல்லை முடிவடைந்துள்ள நிலையில் அந்த நகரின் அனைத்து மக்களும் கார்கள் அல்லது விமானங்கள் மூலம் வெளியேறியுள்ளனர். நகரின் 20000…

Read More

7 பச்சிளம் குழந்தைகளை ஈவிரக்கம் இன்றி கொலை செய்த தாதி!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரிப்பு தொடர்பான முறைபாடின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போது அந்த வைத்தியசாலையில் லூசி லெட்பி என்ற…

Read More

மோதலுக்கு தயாராகும் அசர்பைஜான்-ஆர்மீனியா : ஐ.நா அவசரக் கூட்டம்

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் (Nagorno-Karabakh) பிராந்தியத்துடன் வீதிப் போக்குவரத்தை அசர்பைஜான் படையினா் முடக்கியுள்ளதால், அந்த நாட்டிற்கும் அண்டை நாடான ஆா்மீனியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அசபைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம்…

Read More

மேற்கு ஆபிரிக்க கடலில் நிர்க்கதியான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று மேற்கு ஆபிரிக்காவின் Cape Verde கடலில் நிர்க்கதிக்குள்ளானதில் 60-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது. சிறுவர்கள் உட்பட 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதமாக கடலில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த குறித்த  படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் செனகல் நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. இந்த படகு கடந்த திங்கட்கிழமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படகு மூழ்கியதாக ஆரம்பத்தில் தகவல்கள் வௌியாகியிருந்தாலும், பின்னர் அது கடலில் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டமை…

Read More

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு ; ஜனாதிபதி 

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  இதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி  குறிப்பிட்டார்.  பூஸ்ஸ உயர் கடற்படை பயிற்சி முகாமில்  நேற்று (18) நடைபெற்ற நிகழ்விலேயே   ஜனாதிபதி இதனை கூறினார். 

Read More

சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்

கராப்பிட்டிய  போதனா  வைத்தியசாலையில் சிறுவர் இருதய  சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.  கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருதய பிரிவின் விசேட வைத்திய நிபுணர்  தொழிலுக்காக வௌிநாடு சென்றமையால் இந்த நிலை தோன்றியுள்ளது.  இதன் காரணமாக சிறுவர்களுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகக் குழு தெரிவித்தது.  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுவர் இருதய  அறுவை சிகிச்சையை அவர் மாத்திரமே மேற்கொண்டதாகவும்  அவருடைய வெற்றிடத்தினை பூர்த்தி…

Read More

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு : மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வாக அமையும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் – மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு தடவையும் தாம் பிரதமர் மோடியை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் கச்சதீவை…

Read More

கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமனம்

இலங்கையை மீண்டும் சுபீட்சமான பொருளாதார வளமிக்க நாடாக மாற்றுவதை நோக்காக் கொண்டு கனடாவிலுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால்,  கனடா –  இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.   இந்த நியமன வைபவம்  நேற்று வெள்ளிக்கிழமை (18) கொழும்பிலுள்ள  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில்  குறித்த நியமனம் வழங்கப்பட்டது . 

Read More