டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைத் திட்டம் : 450 மில்லியன் ரூபாவை வழங்கியது இந்தியா

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மெதிவ், தொழில்நுட்ப அமைச்சின்…

Read More

கடன் மறுசீரமைப்பு விவகாரம் ; பாராளுமன்றம் தவிர்ந்த வேறு எவருடைய பரிந்துரைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கப்போவதில்லை

-ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை தவிர்ந்த வேறு எவருடையதும் யோசனைகளையோ நிபந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வண்ணமே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (04) நடைபெற்ற…

Read More

கச்சத்தீவை நாம் மீட்போம் : அண்ணாமலை

மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் கச்சத்தீவை மீட்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் குப்புசாமி அண்ணாமலை சூளுரைத்துள்ளார். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர் படகுகளை மீள கைப்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கச்சத்தீவை மீட்பதே அதற்கான நிரந்தர தீர்வு என தெரிவித்துள்ளார்.

Read More

விவசாய அமைச்சரின் வீட்டிற்கு பேரணியாகச் சென்ற விவசாயிகள்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பாக இன்று (04) முற்பகல் ஒன்றுகூடிய வலவ வலய விவசாயிகள் தமது செய்கைகளுக்குத் தேவையான நீரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அநுராதபுரம் – அங்குனுகொலபெலஸ்ஸ நகரத்தில் இன்று முற்பகல்  விவசாயிகளின் எதிர்ப்பு பேரணியொன்று ஆரம்பமானதுடன், மகாவலி அரச விவசாயிகளின் ஒன்றியமும் அகில இலங்கை விவசாய சம்மேளனமும் இந்த பேரணியை ஏற்பாடு செய்தன. சமனலவெவ  நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு உடனடியாக நீரை விநியோகிக்குமாறு இதன்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  விவசாய அமைச்சரின்…

Read More

13 தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 26 ஆம் திகதி…

Read More

அமைச்சர் அலி சப்ரி நாளை ஈரான் விஜயம்

ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி நாளை வெள்ளிக்கிழமை (4) அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது , அமைச்சர் அலி சப்ரி அங்கு பல முக்கிய சந்திப்புக்களிலில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம்…

Read More

ட்ரம்ப் மீதான 4 குற்றச்சாட்டுகள் நிரூபனம்

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் அதிபா் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா்….

Read More

நீர் கட்டண மாற்றம் தொடர்பான முழு விபரம்

நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார். இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் பெருந்தோட்ட வீடுகளுக்கான நீர் கட்டணங்கள்…

Read More

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று(03) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இன்று(03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சன நெரிசலை குறைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு…

Read More

தேர்தல் முடிவுகளை மாற்றியதாக ட்ரம்புக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றது குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு டிரம்ப் மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளித்தது.அமெரிக்காவை ஏமாற்றச் சதி செய்தல், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ், ஜனாதிபதி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்குத் திரு டிரம்ப் சதி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.அவர் மேலும் 6…

Read More