ஈரானில் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதலில் 2 பொலிஸார் பலி
ஈரானின் சிஸ்டான் மாகாணம் ஜாஹேடான் பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். அத்தோடு 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் மசூதியை தாக்கிய இருவர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை…

