முதலீட்டு சபை – சினொபெக் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை முதலீட்டு சபை மற்றும் சினொபெக் எனர்ஜி லங்கா தனியார் நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைத்து , எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்துக்கமைய சினொபெக் நிறுவனம் 100 மில்லியன் டொலர் முதலீட்டில் எரிபொருள் இறக்குமதி , களஞ்சிப்படுத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மேலும் 50…

Read More

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பது இந்தியாவின் உறுதிப்பாடாகும் – உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

இலங்கையை பொருளாதார, பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தினதும் , வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். இது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதியாகும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். கொழும்பு தாஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை விரிவுபடுத்துவதன் மூலம்…

Read More

மாவீரன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட வாய்ப்பிருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவன உரிமையளர் கே.வி.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட்…

Read More

அவுஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து – பெண்ணொருவர் பலி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரொன்று , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னார் சென்ற பிரிதொரு காருடன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 6 வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளன. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சூடானில் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 87 பேர் உடல்கள்

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படைக்கும் இடையேயான மோதல் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரமடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை வெகுஜன படுகொலை என ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழக்க காரணம் என்ன? – வைத்தியர்கள் விளக்கம்

கடுகன்னாவை – பொத்தபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய சமோதி சந்தீபனி வயிற்று வலி காரணமாக கடந்த திங்கட்கிழமை கெட்டபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் செவ்வாய்கிழமை அதிகாலை அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பேராதனை வைத்தியசாலையில் அவருக்கு ஊசி ஏற்றப்பட்டதன் பின்னரே உடல் நிலை மோசமடைந்து , சமோதி உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். சமோதிக்கு எதற்காக அந்த ஊசி ஏற்றப்பட்டது? அது என்ன ஊசி என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவுள்ளது….

Read More

அரச அங்கீகாரத்துடன் நவம்பரில் மலையகம் – 200 விழா

மலையகம் – 200 எனும் விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  மலையகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்களது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலும் விழாவொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார்.  இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கையொன்றின்…

Read More

அனைவருக்கும் நவீன டிஜிட்டல் அடையாள அட்டை – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் னுபைi – நுஉழn வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாகவும் , டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

Read More

கொழும்பில் 14 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு மாநகசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை நீர் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2024 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர் சேர்க்கை செயல்முறை தொடர்பான அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு , பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் வழங்கப்பட்ட மாதிரி மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி…

Read More