முதல் சுற்றிலேயே வீழ்ந்தார் பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் மிட்செல்லி லியுடன் மோதினார். ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 8-21, 21-18, 18-21 என்ற செட்…

Read More

கவர்ச்சியில் எல்லை மீறுவது தவறு – நடிகை கீர்த்தி ஷெட்டி

கவர்ச்சி குறித்து கீர்த்தி ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், ‘சினிமாவில் கிளாமராக காட்சி அளிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. கதாநாயகிகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் முக்கியம். ஆனால் கவர்ச்சி என்ற பெயரால் எல்லையை மீறக் கூடாது. சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். டெக்னாலஜி அதிகமானதால் எல்லாராலும் சுலபமாக படங்களை பார்க்க முடிகிறது. அப்படி இருக்கும்போது கதை விஷயத்தில் நிறைய ஜாக்கிரதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆபாசமான காட்சி இருந்தால் குடும்பத்தோடு பார்க்க மிகவும் நெருடலாக…

Read More

30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம்

ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்களை மேலும் 30 ஆண்டுகள் நீட்டித்து செயல்படுத்த அந்த நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. பசுமை எரிசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவினை ஜப்பான் அரசு எடுத்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் 30 ஆண்டுகள் இயக்கத்திற்கு பின் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் 30 ஆண்டுகள் இயங்கவிடப்படும்.

Read More

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் இராணுவம் தாக்குதல் ; 4 பேர் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதோடு , மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கீவ் நகர் மீது ரஷ்ய இராணுவம் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகே கர்பாட்டி கிராமத்திலுள்ள ஒரு கோழி பண்ணையில் ரஷ்ய வீரர்கள் பதுங்கி இருப்பதாக உக்ரைனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதன் மீது உக்ரைன் இராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் போது குறித்த கட்டிடத்தில்…

Read More

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ விபத்து : 3 நோயாளிகள் பலி

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகிலுள்ள மோட்லிங் நகரில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மூன்றாவது தளத்தில் பற்றிய தீ, பின்னர் கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில்…

Read More

சிக்கலான பாதுகாப்பு சவால்களை சீனா எதிர்கொள்கிறது – சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்

சீனா அதிக சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங், எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற சீனாவின் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய போதே சீன ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த தொடர்ந்தும் உரையாற்றிய அவர் , சீனாவுக்கு பாதுகாப்பு சவால் அதிகரிப்பதாகவும், எனவே எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருக்குமாறும் பாதுகாப்பு படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தீவிரமான…

Read More

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.   இதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான 5.2 மில்லியன் டொலர் மானியம் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் கொரிய பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்படவுள்ளன. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள சந்திரிகா வாவி மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள கிரி…

Read More

ஒளி/ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடாக ஊடங்களை கட்டுப்படுத்த முடியாது – நீதி அமைச்சர்

ஒளி/ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்தின் மூலம் ஊடங்களையோ சமூக ஊடகங்களையோ கட்டுப்படுத்த முடியாது. மாறாக ஊடகங்கள் மேற்கொண்டு செல்லும் நடவடிக்கையை மேலும் சிறப்பாக கொண்டுசெல்வதற்கு உதவும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் கொண்டுவர இருக்கும் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறான…

Read More

பிரதமர் தினேஷ் குணவர்தன – தாய்லாந்து பிரதமருக்கிடையில் சந்திப்பு

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நாட்டு பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். பாங்கொக்கிலுள்ள அரச அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (31) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் செவாக் உற்சவத்தில் பங்குபற்றுவதன் ஊடாக இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் , வர்த்தக மற்றும் முதலீடுகளைப் போன்றே மத இணக்கப்பாடுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதமரின் இந்த சந்திப்பு அமைந்துள்ளது. இலங்கையும் தாய்லாந்தும்…

Read More

ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளியோம் – ஹர்ஷ டி சில்வா

திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளமையால், அதற்கு பதிலாக ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்படுகிறது.  இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றிக்…

Read More