சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய விவசாயி மகன்

கிரீஸ் நாட்டில் நடந்த சர்வதேசப் போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் மதுரை விவசாயியின் மகன் செல்வபிரபு திருமாறன். மதுரை ஊமச்சிகுளம் அருகே கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமாறன். இவரது மனைவி சுதா. மகன்கள் ராஜபிரவீன் (20), செல்வ பிரபு (18). கால்பந்து வீரரான ராஜபிரவீன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் செல்வ பிரபு, திருச்சி பிஷப் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்….

Read More

பிஎஸ்ஜி கிளப் அணியில் இருந்து மெஸ்ஸி விலகல்: உறுதி செய்த பயிற்சியாளர்

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கிளப்பில் இருந்து விலகுகிறார். இதை அந்த கிளப்பின் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் உறுதி செய்துள்ளார். பிஎஸ்ஜி நாளை கிளர்மான்ட் அணியுடன் மோதுகிறது. இதுவே மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமாகும். கடந்த 2021 முதல் பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். 2021 முதல் 2023 வரையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது…

Read More

சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்

தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம் ஆண்டு பணிநிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் பொலிசம் இன்ஜினியரிங் (Pollisum Engineering) என்ற நிறுவனத்தில் சிக்னல் மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனம் சார்பில் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை தழுவிய விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘ஸ்குவிட் கேம்’…

Read More

சீனாவில் உய்குர் மக்களைப் போல் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஹூயிஸ் முஸ்லிம்கள்

சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் போல் ஹூயிஸ் இன மக்களும் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள்…

Read More

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில், சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் பிராண்டு விற்பனை சரிவை எதிர்கொண்டது. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவடைந்ததையடுத்து அவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து…

Read More

2048இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்குவதே இலக்கு- ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதார நிலைமை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஸ்திரப்படுத்தப்படுவதோடு , 25 ஆண்டுகளுக்குள் இலங்கை உயர் வருமானம் பெறும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றப்படும். இதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் பங்களிப்புடன் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படும். இந்த இலக்கை அடைவதற்கு இளம் தலைமுறையினர் பெரும் பங்களிப்பை வழங்குவர் என உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களால் தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் புதிய வரிக் கொள்கைகள்…

Read More

கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானம்

வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, நிலையான வைப்பு வீதம் மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதம், 250 அடிப்படை அலகுகளால் அதாவது  2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இலங்கை மத்திய வங்கி இன்று(01) காலை அறிவித்தது. பணவீக்கத்தின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை வட்டி வீதங்களை உயர் பெறுமதியில் பேணியது….

Read More

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும் (Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து  இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஆராயப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல…

Read More

மத ஐக்கியத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் பேச்சுசுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை-மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம்

அடிப்படைஉரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஆட்சியை அற்றுப்போகச்செய்யும்இலங்கையின் பலவீனமான  அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தவிர்க்கவேண்டும் என  மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளது இது தொடர்பில் மாற்றுக்கொள்கைகளிற்கான  நிலையம்  மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச  ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ்; நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரிய சமீபத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்து மாற்றுக்கொள்கைகளி;ற்கான நிலையம்  ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது – மத ஐக்கியத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் கருத்துசுதந்திரத்தை முடக்குவதற்கான மிகச்சமீபத்தைய நடவடிக்கை இதுவாகும். ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது இதுவே…

Read More

மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் உடல்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள கபுகந்த சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (31) மாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொலன்னாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த விதம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேவேளை, காலி கோட்டை கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு 35-40 வயது…

Read More