பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – நதாசாவிற்கு 7 ம் திகதி வரை விளக்கமறியல்

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரியவை  ஜூன் ஏழாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.இலங்கையிலிருந்து வெளியேற முயன்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

Read More

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது-அருட்தந்தை சக்திவேல்

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல்  தெரிவித்துள்ளார்.மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும்இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள்இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் மலையக மக்களின் மாண்பினைப் பாதுகாக்கும் அமைப்பு சார்பாக   இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்  வடகிழக்கு மக்களின் அரசியல்…

Read More

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சபலென்கா

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் ப்பிரிவு 2வது சுற்றில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி பெற்றார். ரோலண்ட் கேரோஸில் நேற்று தொடங்கிய இத்தொடரின் முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியுக்குடன் (20 வயது, 39வது ரேங்க்) மோதிய சபலென்கா (25 வயது, 2வது ரேங்க்) அதிரடியா விளையாடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது….

Read More

ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலாசார விழா

பிரேசில், அர்ஜெண்டினா போன்ற ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கார்னிவல் எனப்படும் கலாச்சார திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பெர்லின் நகரில் இது போன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடும் கலாச்சார விழா நடைபெற வில்லை. கொரோனா காரணமாக கார்னிவல் விழா கலையிழந்த நிலையில் இந்த ஆண்டு முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த 3 நாள் விழாவில் பல்லாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். வித்யாசமான முறையில் கோமாளி வேடமிட்டவர்கள் மத்தியில்…

Read More

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் இந்த மகாவலியின் செயல்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

Read More

மல்யுத்த வீராங்கனைகள் கைது – நீரஜ் சோப்ரா ஆதங்கம்

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விதத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி இந்தியாவுக்காக ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பலர் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும்…

Read More

யாசகர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்த விஜய் ஆண்டனி – குவியும் பாராட்டு

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள யாசகர்கள் சிலரை ஸ்டார் உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்து வழங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ்,…

Read More

கோவையில் ஜூன் 3-ல் நடக்கிறது ‘சின்ன குயில் சித்ரா’ இசை நிகழ்ச்சி

அருண் ஈவென்ட்ஸ் மற்றும் முரளியின் மெளனராகம் சார்பில், ‘சின்ன குயில் சித்ரா’ லைவ் இன் கான்சர்ட் இசை நிகழ்ச்சி, கோவை குரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மைதானத்தில் வரும் ஜூன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. லட்சுமி செராமிக்ஸ், போத்தீஸ், ரவி முருகையாவின் தாய் மண்ணே,  கணபதி சில்க்ஸ், சத்யா, வைகிங்,தி மார்க் டிரென்ஸ், க்ரோபக்ஸ், கிளஸ்டர் மீடியா கல்லூரி ஆகியவை இசை நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. திரைப்பட…

Read More

பைபிள் வைத்திருந்த 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த வடகொரியா

வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடான அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப் பின்புதான் வெளியாகும். அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது. மேலும் அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும்…

Read More

துருக்கி அதிபர் தேர்தல் 2023: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து…

Read More