கனடா -ஆல்பர்ட்ரா மாகாணத்தில் காட்டுத்தீ: அவரச நிலை பிரகடனம்

கனடாவின் ஆல்பர்ட்ரா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆல்பர்ட்ரா மாகாணத்தில் உள்ள டிரையிங் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்து 110 இடங்களில் நெருப்பு பற்றி எரியும் நிலையில், 36 இடங்களில் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியுள்ளது. ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கும் முயற்சியில்…

Read More

பாடசாலை மாணவியின் மர்ம மரணம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதி கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முன்னதாக மாணவி உயிரிழந்தது தொடர்பாக விடுதிக்கு அவருடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் நேற்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது குறித்த பாடசாலை மாணவி நேற்று (06) மாலை…

Read More

இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை லண்டனில் சந்தித்தனர்

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது. முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய…

Read More

சிட்டாடெல் ரீமேக்கா? – சமந்தா மறுப்பு

ஹாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள வெப்தொடர், ‘சிட்டாடெல்’. ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்த ஸ்பை தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வாரம் ஒரு எபிசோடாக வெளியாகி வருகிறது. இதன் இந்திய பதிப்பில் சமந்தாவும், இந்தி நடிகர் வருண் தவானும் நடித்து வருகின்றனர். இது பிரியங்கா சோப்ரா நடிக்கும் தொடரின் ரீமேக் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இரண்டும் ஒரே கதையா? ரீமேக்கா? என்று சமூகவலைதளப் பக்கத்தில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள சமந்தா,…

Read More

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர். வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரவலாக கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில்…

Read More

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த திங்கள்கிழமை (மே 1) தொடங்கியது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சபலென்காவும், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியும் மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றுக்கு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்….

Read More

வறுமையை மறைக்கும் சீனா: அமெரிக்க ஊடகம் குற்றச்சாட்டு

உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை ஓய்வூதியமாகப் பெறும் ஒருவர் மளிகை கடையில் நின்று என்ன பொருட்களை வாங்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலானதாகவும் அதனை சீன அரசு நீக்கியதாகவும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்…

Read More

காலிஸ்தான் தலைவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் என்கிற மாலிக் சர்தார் சிங், பாகிஸ்தானின் லாகூரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் கமாண்டோ படை கடந்த 1986-ல் உருவாக்கப்பட்டது. சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்கிற சுதந்திர நாட்டை ஆயுதப் போராட்டம் மூலம் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதன் தலைவர் லாப் சிங், இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பிறகு 1990-களில் அதன் தலைமை பொறுப்பை பரம்ஜித் பஞ்ச்வார் ஏற்றார். பிறகு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவால் தேடப்படும்…

Read More

ராஜஸ்தானில் வீட்டின் மீது விழுந்த போர் விமானம்

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இன்று (மே 08) காலை வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்த போர் விமானம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு…

Read More

மன்னாரில் சிலையுடன் மூவர் கைது

தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன்  மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.    நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான திருமால் சிலை  வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Read More