மக்களே அவதானம் ! சூரிய ஒளியால் கண்களுக்கு பாதிப்பு 

சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நேரடியாக சூரிய ஒளி அதிகமாகப்படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்ணாடிகள் அணிவதன்…

Read More

மீண்டும் ஹீரோயினான இனியா

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர், இனியா. ஆரம்பத்தில் சிறுபட்ஜெட் படங்களில் நடித்த அவர், பிறகு ‘வாகை சூட வா’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். திடீரென்று இரண்டாம் நிலை கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இந்நிலையில், ‘சீரன்’ படத்தில் மீண்டும் இனியா ஹீரோயினாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ஜேம்ஸ் கார்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக…

Read More

3 வீரர்களுடன் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய சீனா

சீனர் உள்பட 3 விண்வெளி வீரர்களுடன் புதிய விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது.சீனாவின் லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-16 விண்கலம் ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து 9:31 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு, புவி வட்டப்பாதையை அடைந்து, அதற்கான நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்தது. வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. விண்வெளி வீரர்கள் ஏழு மணி நேரத்திற்கும் குறைவான பயணத்திற்குப் பிறகு, சுமார் 400…

Read More

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். தல் சுற்றில் செக் குடியரசின் பிரெண்டா பிருஹ்விர்தோவாவுடன் நேற்று மோதிய ரைபாகினா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் கோகோ காஃப் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள்…

Read More

பன்றிகளை வெளியே கொண்டு செல்ல தடை

பன்றிகளிடையே பரவி வரும் வைரஸானது மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் K.K.சரத் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்று இதற்கு முன்னரும் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் இது வேகமாக பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என மேல் மாகாண கால்நடை…

Read More

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இன்று இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா(Kenji Okamura) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.  அதற்கு மேலதிகமாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கண்காணிக்கவுள்ளார்.  நாட்டின் பொருளாதாரத்…

Read More

நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் பூகம்பம்

நியூ ஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இப்பகம்பம் ஏற்பட்டுள்ளது. 33 கிலோமீற்றர் இப்பூகம்பம் ஏற்பட்டதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து, கிட்டிய தூரத்திலுள்ள மக்கள் வசிக்கும் நகரான இன்வரகார்கிலில் உள்ள அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை எனக் கூறியுள்ளார். 

Read More

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்தும் திருத்த பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் – விமல்

ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்தும் வகையிலான சட்ட திருத்தப் பிரேரணையை ஜனாதிபதி கொண்டு வந்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மக்கள் தமது சமகால அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் போல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற இலங்கை மேலவை கூட்டணியின்…

Read More

இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவு : சீன வெளிவிவகார பிரதி அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர்  சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் செவ்வாய்க்கிழமை (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன…

Read More

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில்…

Read More