வெடுக்குநாறிமலை வழிபாடுகளை தடுக்கக்கூடாது – வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு

வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.  வவுனியா வடக்கு, ஒலுமடுவிலுள்ள தொல்பொருள் சிறப்புமிக்க வெடுக்குநாறிமலை, ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அண்மையில் சேதமாக்கப்பட்டிருந்தன.  இந்த சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன்போது வெடுக்குநாறிமலை பகுதியில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில்…

Read More

இன்று கூடுகிறது பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று(25) காலை கூடவுள்ளது.  நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்ததை போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், இன்றைய பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை.

Read More

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

கட்சி யாப்பிற்கமையவே பீரிஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார் ; நீதிமன்றத்தை நாட முன் மனசாட்சிக்கமைய சிந்திக்க வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பிற்கமையவே தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் அவர் மனசாட்சியுடன் சந்தித்து செயற்பட வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உடுகம்பொலவில் அமைந்துள்ள மறைந்த அரசியல்வாதி ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்தில் அவரது 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்…

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்க நேரிடும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீண்டும் இழக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பல இலட்சக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். எனவே அரசாங்கம் இதனை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , 2018 இல் ஆட்சி…

Read More

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்புஜனாதிபதியிடம் மீண்டும் உறுதியளித்தது சீனா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் மியாவ் ஜியான்மின் உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். இதன் போதே ஜனாதிபதியிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய முதலீட்டு முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் தனியொரு பெரிய…

Read More

சுற்றுலாத்துறை பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் போது இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுடன் சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான தீர்வுகளை வழங்குமாறும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சாகல ரத்நாயக்க பணிப்புரை…

Read More

டுவிட்டரில் இருந்து விலகிய யாஷிகா!

தமிழில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தற்போது பேய் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக யாஷிகா ஆனந்த் அறிவித்து உள்ளார். டுவிட்டரில் தற்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டுவிட்டரின் புதிய கொள்கையால் சந்தா கட்டாத பிரபலங்களின் கணக்கில் உள்ள ‘புளூ டிக்’ நீக்கப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடரும் பிரபல…

Read More

விஷால்-ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து விஷால், சுருதிஹாசன் நடிப்பில் ‘பூஜை’ திரைப்படத்தில் ஹரி இயக்கியிருந்தார். இந்த நிலையில். விஷால்-ஹரி கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில், ‘விஷால்-24’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.

Read More

சோமாலியாவில் துப்பாக்கிச் சூடு : பொதுமக்கள் உள்பட 21 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல் ஷபாப், தலைநகர் மொகதீசுவில் சோமாலிய கூட்டாட்சி அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள பகுதிகளை அரசாங்கப் படைகளிடம் இழந்த பிறகு, சமீபத்திய மாதங்களில் இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களை இந்த குழு தீவிரப்படுத்தியது. இந்நிலையில் அந்த நாட்டு இராணுவத்துக்கும், அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சூட்டில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு , எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 3 பேர்…

Read More