பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: பாகிஸ்தானியர்கள் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் அமைந்துள்ள புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த டாக்டர் தாரிக் பட் (அகமதியா முஸ்லிம் கம்யூனிட்டி) கூறியதாவது. அனைத்து சமூகங்களையும் மதிக்கும் திறன்…

Read More

வசந்த கரணாகொடவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு அமெரிக்கா பயணதடை விதித்துள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில்  இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள வசந்த கரணாகொடவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாட்டுச்செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச்சட்டம் 2023 இன் பிரிவு 7031 இன் கீழ் வசந்தகரனாகொடவை இந்த பட்டியலில்…

Read More

சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார் உள்பட 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் தன்டேவாடா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது காவல் வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார், ஒரு ஓட்டுனர் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட் நிகழ்த்திய தாக்குதலில் 10 போலீசாரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்…

Read More

ஜனாதிபதியின் விஷேட கோரிக்கை

இலங்கை தனியார் கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே மேடையில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து உரையாற்றி ஜனாதிபதி, 2022 ஜூலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு கிட்டத்தட்ட…

Read More

சினோபெக் நிறுவன அதிகாரிகள் இலங்கை விஜயம்

இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குழுவுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று அமைச்சில் இடம்பெற்றது. அங்கு ஒப்பந்தம் தொடர்பான அட்டவணைகள், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே…

Read More

சானியா மிர்சாவுடன் விவாகரத்தா? – ஷோயிப் மாலிக் விளக்கம்

இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுடனான விவகாரத்து வதந்திகளை அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷோயிப் மாலிக் மறுத்துள்ளார். தாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளாததற்கு நேரமின்மையே காரணம் எனவும் அவர், தெரிவித்துள்ளார். இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களாக சானியா, ஷோயிப் மாலிக் ஜோடியாக பொது…

Read More

‘எனக்கு ஆன்மீக நாட்டம் அதிகம்’ – ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இவர் தனது உடலில் தனது பெயரான ‘ஷ்ருதி’ என்பது உட்பட 5 டாட்டூக்களை குத்தியுள்ளார். இந்நிலையில் இப்போது புதிதாக, வேல் ஒன்றை டாட்டூவாக வரைந்துள்ளார். இதை அவர் காதலர் சாந்தனு வடிவமைத்துள்ளார். இதுபற்றி தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் எப்போதும் ஆன்மீக நாட்டம் கொண்டவள். முருகப்பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. இந்தடாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்பினேன்….

Read More

‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு முறையான அனுமதி பெறவில்லை எனச் சொல்லி நேற்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது முறையான அனுமதி பெற்று அதே இடத்தில் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறுவதாக தகவல். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி நேற்று படமாக்கப்பட்டது….

Read More

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் 73 ஆக உயர்வு – 212 பேர் மாயம்

கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மேக்கன்ஜி நெதாங்கே. இவர் தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார். இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர். சிலரது…

Read More

கஞ்சா கடத்திய வழக்கு: சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

1 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா. தமிழரான இவர் 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். மேலும் கஞ்சா கடத்திய வழக்கில் 2018 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது சிங்கப்பூர் அரசு. இவரது மரண தண்டனை சிங்கப்பூரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ”ஆனால் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலே தங்கராஜு குற்றவாளி என…

Read More