சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பயங்கரவாதி  சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பகுதியில் உள்ள தனது மனைவியின் பெற்றோரின்  வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள்  கைது செய்யபட்டுள்ளனர்.    கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு  தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் என…

Read More

 மீண்டும் இணையும் தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி

‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது. இதையடுத்து மாரிசெல்வராஜ் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷை பொறுத்தவரை அவரது நடிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இதையடுத்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன்…

Read More

படத் தலைப்பை எதிர்த்து வழக்கு -ரம்யா

கன்னட நடிகையான ரம்யா, தமிழில் ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர். இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவர் தயாரித்துள்ள படத்திற்கு ‘சுவாதி முத்தின மளே ஹனியே’ (Swathi Muttina Male Haniye) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பிரபல கன்னட சூப்பர் ஹிட் பாடலின் வரி. இந்த தலைப்பைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து…

Read More

IPL | சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் காயம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணி வீரர்கள் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை…

Read More

ஆர்லியன்ஸ் பாட்மிண்டன் | சாம்பியன் பட்டம் வென்றார் ரஜாவத்

ஆர்லியன்ஸ் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியன்ஷு சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் பிரியன்ஷு ரஜாவத், 21-15, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்சனை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.

Read More

கடலுக்கு அடியில் ‘மீண்டும் ஏவுகணை சோதனை’ : வடகொரியா

கடலுக்கு அடியில் மீண்டும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஹெய்ல்-1 என்று அழைக்கப்படும் அணு ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் கடந்த வாரம் வடகொரியா நடத்தியது. இதற்கு உலக நாடுகளிடம் கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கு ஹெய்ல் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகள் கடலுக்கு அடியில் செலுத்தும்போது செயற்கையான சுனாமி அலைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஹெய்ல்…

Read More

தொடரும் பதற்றம்: தைவானை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை

தைவானை சுற்றி இரண்டாவது நாளாக சீனா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன ராணுவம் சனிக்கிழமையன்று தைவானைச் சுற்றிப் பயிற்சிகளை அறிவித்தது. இதனால் இரு நாட்டு எல்லையுல் பதற்றம் நீடித்து வருகின்றது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4…

Read More

மற்றுமொரு படுகொலை

குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாவார். கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது, ​​யுவதி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அரநாயக்க பொலிசார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி…

Read More

சம்சுங் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க சம்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு சம்சுங் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 96% லாபம் குறைந்துள்ளதால் மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் செயல்பாட்டு இலாபம் 366 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக சம்சுங் தெரிவித்துள்ளது. கடந்த கொவிட் காலத்தில் சந்தையில் மெமரி சிப் விற்பனை அதிகரித்திருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் 

காதலனுடன் சமனல வாவியை பார்வையிட வந்த யுவதியை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று…

Read More